பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Latest Posts

புதன், 13 செப்டம்பர், 2023

BJP government Failed - பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்.!.


🎈பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும்,  இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்.!.

 சு.வெங்கடேசன் M.P.

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீற்றிக் கொள்பவர்கள்யாரிடமாவது கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் இருக்கிறதா?

1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?

3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?

3. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப்பட்ட 10,000 கோடி பணம் யாருடையது? பிரசாந்த் கிஷோர் சம்பளம் உட்பட. அல்லது பத்தாயிரம் கோடிகளை ஒரு கட்சிக்கு வாரி வழங்கி டொனேஷன்கள் தருமளவு பணக்காரர்கள் ஏன் முன்வந்தார்கள் ?

4. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?

5. எதிர்க்கட்சிகள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன், பாஜக மீது குற்றம் கூறியவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுகள் பாய்ந்து பாய்ந்து நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர் அமைதியானவுடன் அந்த வழக்குகளும் அமைதியாவது எப்படி?

6. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பாஜக அரசிலேயே பதவி வழங்கியதேன்?

7. வெளிநாடுகளில் பதுக்கியதாகச் சொல்லப்பட்ட பல லட்சம் கோடி கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட இன்று வரை மீட்கப்படவில்லையே? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக் கூட வெளியிட முடியவில்லையே... ஏன் ஏன்? இந்தியாவில்  பாதையோரம் கடை வைத்து சுருக்குப்பையில் சில ஆயிரங்களிலிருந்து, சில லட்சங்கள் என்று சேர்த்து வைத்த ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தின் சேமிப்புப் பணங்களை டீமானடைசேஷன் செய்து கள்ளப்பணமாக ஆக்கி வேட்டையாடியது தான் கறுப்புப் பண ஒழிப்பின் லட்சணமா ?

8. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை, பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறும் மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?

10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உட்பட அத்தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன? ராணுவம் என்பது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது இல்லையா ?

11. கடந்த தேர்தலில் கைப்பற்றபட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடியவில்லை? பத்திரிக்கைகளில் இவ்வளவு வெட்டவெளிச்சமான கண்டெயினர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெயினர்களின் எண்ணிக்கை என்ன?

12. மோடி பல்லாயிரம் கோடி அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால், ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை? வந்தது  எனில் விபரமென்ன  ?  எவ்வவளவு ?

13. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளிநாடுகளில் பல லட்சம் கோடிகள் முதலீடு செய்வது எப்படி?

14. மோடியின் வெளிநாட்டுப் பணம் இந்தியாவிற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் மட்டும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா? அவரது நண்பர்கள் உள்நாட்டு இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடிகள் வாங்கி வெளிநாடுகளில் முதல் செய்து, கடனை அடைக்காமல் கைவிட்டு, அதை மோடி அரசு தள்ளுபடி செய்தது எப்படி ? இதே வேலையை முந்தைய காங்கிரஸ் அரசும் செய்ததாலா ? காங்கிரஸ் அரசு செய்ததால் மோடி அரசு செய்வதும் நியாயமாகிவிடுமா ?

15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் நல்ல லாபத்தில் இயங்கிய ரயில்வே, தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்து எப்படி? இன்று ரிலையன்ஸூக்கும், அதானிக்கும் விற்கப்படுவது எப்படி ? அரசு ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களும் இன்று அதானி ஏர்ப்போர்ட்டுகளும், துறைமுகங்களுமாக மாறியது எப்படி ?

16. பெட்ரோல் மீதான 300 சதவீத இலாபம் அரசுக்கு மட்டுமே என்றால், இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல் தனியார் வசம் இருப்பது ஏன்? அந்த லாபங்கள் மக்களுக்கு என்னவாக செலவிடப்பட்டிருக்கின்றன ?

17. தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் டோல் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்? இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தவும் செய்திருக்கிறார்கள். பாஸ்டேக் என்று ஆன்லைன் கொள்ளையடிப்பதை கட்டாயமாக்கியிருக்கிறார்கள். யாரிடம் அனுமதி கேட்டார்கள் ?

18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன?

19. ஏழை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள், பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் மர்மம் என்ன?

20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்ஐசி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்ஐசியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது? இதேபோல பல்லாயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்கள் சில நூறு கோடி ரூபாய்களுக்கு தனியாரிடம் விற்கப்படும் மர்மம் என்ன ? இதன் பின்னுள்ள பொருளாதார அறிவு என்ன ?

21. மாநிலங்களின் GST பங்குகள் எங்கே மாயமானது?

22. கொள்ளையர்கள், ரவுடிகள் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருகிறார்களே ஏன் ?ரவுடிகளின், கற்பழிப்பு காவாளிகளின் கடைசி புகலிடம் பாஜகதானா?
23  PM. Care  collection
எவ்வளவ ?  என்ன் கணக்கு?

இன்னும் பல புதிரான கேள்விகளுக்கு விடையே இல்லை.
ஆனால் நம்புங்கள்..
 
மோடி புனிதர்,  வலுவானவர்.

பாஜக உத்தமர்களின் கட்சி!
பா.ஜ.க 8 வருட ஆட்சி.
கீழே உள்ள தகவல்களில் எதாவது ஒன்று தவறாக இருந்தாலும் BJP நண்பர்கள் உட்பட யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டலம்.......


1-பெட்ரோல் / டீசல் வரி 300% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்
11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
20- பலுசிஸ்தான் தலையீடு
21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்
-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம்
28-மேக் இன் இந்தியா
29-டிஜிட்டல் இந்திய திட்டம்
30-அணு உலை
31-புல்லட் ரயில்
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம்
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு
41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி - ராணுவ ராணுவ ரகசியங்கள்
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி
51-வியாபம்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 8000 கோடி
55-பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு
71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல்
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .

90 ஆதார் அட்டை குழா்படிகள்-
91 காவிரி நதி நீர் ஆணையத்தின் அதிகாரத்தை குறைத்தது
92 கொரோனா சொதப்பல்கள் பலரை கொலைசெய்தது
93 CAA  NRC ,CAB ,????
94 68000 மார்வாடிகளுக்கு தள்ளுபடி மற்றவர்களுக்கு பட்டை
95 HB
96 உன்னா ரேப். உபியில் எம்எல்ஏ பாலியல் கொடுமை செய்த பெண்ணின் மொத்த குடும்பத்தையும் கொன்று அந்த பெண்னை உயிருடன் கொளித்தி கொன்றது.  
97 பின்வாசல் வழியாக பலமாநிலங்களில் ஆட்சியை மிரட்டி பறித்தது
98 மாநிலங்களின் ஜிஎஸ்டி யை ஆட்டையபோட்டது.
99 பழங்குடி மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த 84 வயது முதியவர் ஸ்டேன் சாமி என்பவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைத்தது  ஜாமீன் கூட கொடுக்காமல் சிறையிலேயே மரணிக்க வைத்தது.
100 பிரான்ஸ்லிருந்து வாங்கிய ரஃபேல் போர் விமான ஊழலை விசாரிக்க பிரான்ஸ் அரசு உத்தரவிட்ட பின்னும் இன்னும் இங்கே வாய்மூடி மௌனம் காப்பது.
101 ஒட்டு கேட்க,மென் பொருள்  வாங்கிய விபரம் ?

இதற்கெல்லாம் பதில் 2024 ல் கூறப்படும்!

______________________________________
(அதிக நண்பர்களைக்
கொண்டவர்கள் பகிர்ந்தால்
தகவல் பலரை சென்றடைய உதவும்)

------++++++++++++++++++++++++++-------

புதன், 29 ஜூன், 2022

How to find Heart Attack - மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு_பதிவு💞👇🙏🏻

 How to find Heart Attack - மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு_பதிவு💞👇🙏🏻

மாரடைப்புக்கு முன் மூன்றுமணி நேரம்

பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவல் இது.

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு

S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது.

S = SMILE
T = TALK
R = RAISE BOTH ARMS

ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம் ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்!!

மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை
S T R அதாவது,

SMILE (சிரிக்க சொல்வது 😄),

TALK (பேச சொல்வது😲),

RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻)

        இது போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும் மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே கண்டு பிடித்து விடலாம். அதாவது, இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்! இல்லையேல் பிரச்சனை பெரிதுதான்!

    உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கை என்ன வென்றால், இந்த சோதனை செய்த, 

3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால் போதும், எளிதாக உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று உறுதியாக கூறுகிறார்கள்.

       இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

      அதாவது, அவருடை 👅நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,

அவர் தனது நாக்கை👅 நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

      மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்றும் சொல்கிறார்!!

             பகிர்வு

சனி, 16 ஏப்ரல், 2022

நான் ஏன் மோடியை க‌ண்டு விய‌க்கிறேன், தெரியுமா..? Amazing facts about Modi in tamil

*நான் ஏன் மோடியை க‌ண்டு விய‌க்கிறேன்,  தெரியுமா..?*

உங்களுக்கு தெரியுமா..?

*● மோடி இரண்டு முறை பிறந்தவர்...!*

1) 29.09.1949 டிகிரி சான்றிதழ் இருப்பது...!

2) 17.09.1950 எல்லோரும் அறிவது...!

✍️ 1950 இல் பிறந்த மோடி தனது 6 வயதில் வாட்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றார்...!

ஆனால்...

🤞 அந்த காலக்கட்டத்தில் வாட் நகரில் வெறும் ரயில் தடங்கள் மட்டுமே இருந்தன...!

*○ உண்மையில் அங்கு ரயில் நிலையம் 1973 இல்தான் கட்டப்பட்டது...!*

○ அப்போது மோடிக்கு வயது 23...!

பாவம், மோடிதான் ௭வ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்...!

✍️ மோடி எமர்ஜன்சி காலத்தில் மறைந்து வாழ்ந்து வந்தார்.

🤞 ஆனால் 1978-ல் டெல்லி பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார்

🤞 டெல்லி பல்கலைக் கழகத்தின் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லாமலேயே...

🤞 1983 இல் குஜராத் பல்கலைக் கழகத்தில் Entire political science முதுகலை பட்டம் படித்தார்...!

*🤞 Entire political science இல் முதுகலை பட்டம் பெற்ற ஒரே நபர் மோடி மட்டுமே...!*

🤞 குஜராத் பல்கலைக் கழக பேராசிரியர்கள் கூட...

*🤞 இப்படி ஒரு பாடத்திட்டம் இருப்பதையே, 2014 க்குப் பிறகே அறிந்து கொண்டனர்...!*

🤞 Entire political science பட்டப்படிப்பில் மாஸ்டர்ஸ் தேர்ச்சி பெற்றார், தனியாக தேர்வு எழுதினார், தனியாகவே பட்டமும் பெற்றார்...!

🤞 இதுவரை மோடியுடன் படித்ததாகக் எந்த மாணவரும், ப‌டிப்பித்த‌ எந்த பேராசிரியரும் கண்டுபிடிக்கப் படவில்லை...!

🤞 இந்தியாவில் கணினிகள் அறிமுகப் படுத்தப் படுவதற்கு முன்பே, மோடியின் பட்ட சான்றிதழ் ஒரு கணினியால் அச்சிடப்பட்டது...!

🤞 1978 ஆம் ஆண்டில் மோடியின் பட்டத்திற்கு முன்பும், அதன் பிறகான 10 ஆண்டுகளுக்கும்...

*🤞 சான்றிதழ்கள் பல்கலைக் கழக ஊழியர்களால் கைகளாலேயே எழுதப்பட்டன..!*

🤞 1992 இல் மைக்ரோசாப்ட் காப்புரிமை பெற்ற எழுத்துரு (font)

*🤞 1978 இல் மோடியின் பட்டத்தை அச்சிட பயன்படுத்தப் பட்டது ஒரு விஞ்ஞான‌ அதிச‌ய‌ம்.*

🤞 அலுவலகங்கள், கல்லூரிகளின் விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமையில்...
○ மோடியின் சான்றிதழ் அச்சிடப் பட்டுள்ளது...!

😆😆 மோடிஜியின் வாழ்க்கையில் தான்....
எத்தனை ஆச்சரியங்கள்...!

எத்தனை அதிசயங்கள்...!

*🥳🥳 மறந்து விடுவது மக்கள் இயல்பு..! நினைவு படுத்துவது எம் கடமை...!*👍👍

புதன், 9 மார்ச், 2022

இந்த காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கக்கூடாது - These vegetables should not be kept in the fridge - Tamil Awareness

 இந்த காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கக்கூடாது.... 💚❤️These vegetables should not be kept in the fridge

காய்கறிகள், பழங்கள், உணவு பதார்த்தங்களை பாதுகாக்கும் சமையல் தோழனாக குளிர்சாதன பெட்டி அமைந்திருக்கிறது. உணவு பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகளில் தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கும் தன்மையும் அதில் இருக்கிறது. பொதுவாக பிரிட்ஜை 30 முதல் 38 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் வைத்து பராமரிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அந்த வெப்பநிலை உணவு பொருட்கள் கெட்டுப்போவதை தடுக்க உதவும். எனினும் எல்லா வகையான உணவு பொருட்களையும் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கக்கூடாது. தக்காளி,வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, பப்பாளி, கத்திரிக்காய் போன்ற உணவு பொருட்களை பிரிட்ஜில் வைப்பது நல்லதல்ல என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

தக்காளி: இதனை பிரிட்ஜில் சேமித்து வைத்தால் அதன் தரமும், ருசியும் குறைந்துபோய்விடும். குளிர்ந்த வெப்பநிலை தக்காளியின் உள் அடுக்குகளின் தன்மையை மாற்றிவிடும். பிரிட்ஜுக்குள் அதிக நாட்கள் தக்காளியை வைத்திருந்தால் அதன் மென்மைத்தன்மை நீங்கிவிடும். வெளிப்புற தோல் சுருங்கிப்போய் சுவையற்றதாக மாறிவிடும். தக்காளியை அறையின் வெப்பநிலையில் காற்றோட்டமாக வைத்திருப்பதே நல்லது.

கத்திரிக்காய்: இது வெப்பநிலை உணர் திறன் கொண்ட காய்கறியாகும். 50 டிகிரி பாரன்ஹீட்டுக்கு கீழேதான் பிரிட்ஜின் வெப்பநிலை இருக்கும் என்பதால் அந்த வெப்பநிலை கத்தரிக்காய்க்கு ஒத்துக்கொள்ளாது. அதன் சுவையை குறைத்துவிடும். அறையின் வெப்பநிலைதான் கத்திரிக்காய்க்கு உகந்தது. அதுபோல் பிற காய்கறிகள் பழங்களுடன் கத்திரிக்காயை சேர்த்து வைக்கக்கூடாது. தனியாக வைத்திருப்பதுதான் நல்லது.

பிரெட்: பொதுவாகவே பிரிட்ஜில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலை சில பொருட்களை எளிதில் உலரவைத்துவிடக்கூடும். பிரெட்டும் குளிர்ந்த வெப்பநிலையில் சட்டென்று உலர்ந்துபோய்விடக்கூடியது. குளிர்ந்த சூழலில் நீண்ட நேரம் இருந்தால் அதன் தன்மையே மாறிப்போய்விடும்.

வெங்காயம்: இதனை பிரிட்ஜுக்குள் வைத்தால் மென்மையாக மாறிவிடும். அதில் பூஞ்சையும் படரக்கூடும். வெளியே காற்றோட்டமாக வைத்திருந்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

பூண்டு: பிரிட்ஜுக்குள் பூண்டுவை சேமித்து வைக்கக் கூடாது. அதில் நிலவும் குளிர்ந்த வெப்பநிலை பூண்டுவின் சதை பகுதியை கடினமான தாக்கிவிடும். நீண்ட நாட்கள் சேமித்துவைத்தால் முளை விடக்கூடும். காற்றோட்டமான கூடையில் சேமித்துவைத்தால் ஒரு மாதம் கூட உபயோகிக்கலாம். கெட்டுப்போகாது.

உருளைக்கிழங்கு:
உலர்ந்த இடத்தில் உருளைக்கிழங்கை சேமித்து வைப்பதுதான் நல்லது. பிரிட்ஜின் குளிர்ச்சி தன்மை உருளைக்கிழங்கில் இருக்கும் மாவுச்சத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். சுவையும் குறைந்துபோய்விடும். பிரிட்ஜுக்குள் நீண்ட நாட்கள் உருளைக்கிழங்கை வைத்திருந்தால் மேற்புற தோல் கருமையாக மாறிவிடும்.

ஆரஞ்சு: சிட்ரஸ் பழங்களில் அதிக அமிலத்தன்மை கொண்டது ஆரஞ்சு. அதனை குளிர்சாதன பெட்டியில் சேமித்துவைத்தால் தோல் பகுதியில் புள்ளிகள் தோன்றக்கூடும். மென்மை தன்மையும் மாறக்கூடும். கடினமான தோல் கொண்ட ஆரஞ்சுக்கு வெப்பமான சூழல்தான் ஏற்றது.

பப்பாளி: பப்பாளியையும் பிரிட்ஜில் வைக்கக்கூடாது. காற்றோட்டமான இடத்தில்தான் பப்பாளியை வைக்க வேண்டும்.

தேன்: இது இயற்கையாகவே தன்னை பாதுகாத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. அறையின் வெப்பநிலையில் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கெட்டுப்போகாமல் பாதுகாக்கலாம். பிரிட்ஜுக்குள் சேமித்துவைத்தால் கடினமாகிவிடும்.

ஊறுகாய்: ஊறுகாய் தயாரிக்கும்போது உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. அவை கெட்டுபோகாத அளவிற்கு பதப்படுத்தப்படுகிறது. அதனால் அதனை குளிர்ந்த வெப்பநிலையில் வைத்திருப்பது தேவையற்றது.

வாழைப்பழம்: வாழை மரங்கள் வெப்பமான காலநிலையில் வளர்க்கப்படுகின்றன. பழங்களை அறை வெப்பநிலையில் வைக்கும்போது ஊட்டச்சத்துக்கள் சீராக இருக்கும். குளிர்சாதன பெட்டியில் வைத்தால் இயற்கையாக பழுக்கும் செயல்முறை பாதிப்புக்குள்ளாகும்.

சாக்லெட்: நிறைய பேர் சாக்லெட்டை குளிர்சாதன பெட்டியில் சேமித்துவைத்து சாப்பிடுகிறார்கள். அப்படி குளிரவைப்பதன் மூலம் அதன் சுவை மாறுபடலாம்.

ஆப்பிள்: இதனை பிரிட்ஜில் வைப்பதை விட வெப்பமான இடத்தில் வைத்தால் அதன் சுவை நன்றாக இருக்கும். அறை வெப்பநிலையில் 2 வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் உபயோகிக்கலாம்.

மாவு: குளிர்ந்த வெப்பநிலையில் மாவை வைத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இருந்தாலும் பிரிட்ஜில் வைக்க தேவையில்லை. காற்றுப்புகாத அளவுக்கு இருக்கமாக மூடி வைத்தாலே போதுமானது.


 

வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு! -

 வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு இயற்கை முறையில் தீர்வு!

எதனால் உப்பி விடுகிறது..?

இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் வாயுக்கள் அதிகம் உள்ள உணவு பொருட்களை நாம் உண்பதே.

குறிப்பாக ப்ரோக்கோலி, பீன்ஸ், குளிர்பானங்கள், காலிஃளார் போன்றவை முதன்மையான காரணிகளாக உள்ளது. மேலும், இந்த நிலை உங்களுக்கு மலச்சிக்கல், வாயு தொல்லை, வயிறு உப்பசம் என பல கோளாறுகளை தரும்.

 சீமை சாமந்தி டீ

வயிறு உப்பி கொண்டே போவதை விரைவிலே குணப்படுத்த இந்த சீமை சாமந்தி டீ உதவும்.

செய்முறை :-  நீரை கொதிக்க விட்டு அதில் சீமை சாமந்தி பூவை போடவும். 5-10 நிமிடம் கொதிக்க விட்டு, ஆறியவுடன் வடிகட்டி கொள்ளவும். இந்த டீயுடன் தேன் வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம். தினமும் 2 அலல்து முறை இந்த டீயை குடித்து வந்தால் எளிதாக வயிற்று உப்பசத்தை குறைத்து விடலாம்.

 இஞ்சி டீ

வயிற்று உப்பி கொண்டிருக்கும் பிரச்சினைக்கு வேறொரு அற்புதமான தீர்வு இந்த இஞ்சி தான். தண்ணீரை கொதிக்க விட்டு அதில் சிறிது இஞ்சியை நசுக்கி போடவும். 5 நிமிடம் கொதிக்க விட்ட பின், இதனை வடிகட்டி கொள்ளவும். பிறகு இவற்றுடன் தேனை கலந்து குடித்து கொள்ளலாம்.

 புதினா டீ

உங்களின் பிரச்சினையை மிக சுலபமாக குணப்படுத்த கூடிய ஆற்றல் இந்த புதினா டீயிற்கு உள்ளது.

செய்முறை :- முதலில் நீரை கொதிக்க விட்டு, பிறகு கை நிறைய புதினா இலைகளை அந்த நீரில் போடவும். 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். பிறகு இதனை வடிகட்டி 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வரலாம்.

இவ்வாறு ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வருவதால் செரிமான பிரச்சினை, வயிற்று உப்பசம் போன்ற பல பிரச்சினைகள் குணமாகும்.

நம் வீட்டில் இருக்கும் இந்த எலுமிச்சையை வைத்தே நாம் வயிற்று உப்பசத்தை எளிதாக குணப்படுத்தி விடலாம். அதற்கு, முதலில் நீரை கொதிக்க விட்டு அதில் எடுத்து கொள்ளவும். பிறகு இதனுடன் எலுமிச்சை சாற்றை 1 ஸ்பூன் & தேன் கலந்து குடித்து வரவும். இதனை தினமும் காலையில் குடித்து வந்தால் விரைவாக உப்பிய வயிறு குறைந்து விடும்.

மேற்சொன்ன முறைகளை வைத்தே உங்களின் வயிற்று உப்பசத்தை எளிமையாக குணப்படுத்தி விடலாம்.

12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்!! - Grandmother's cure for 12 types of diseases - Home Remedies

 12 வகையான நோய்களுக்கு பாட்டி வைத்தியம்!! -  Grandmother's cure for 12 types of diseases

✍️என்னதான் நாம் நவீன காலத்தை நோக்கி மாறிக்கொண்டே இருந்தாலும், நம்முடைய சில பழங்கால பழக்க வழக்கத்தை விட்டு மட்டும் மாறுவதில்லை அவற்றில் ஒன்றுதான், பாட்டி வைத்தியம்.

இன்று பாட்டி வைத்தியத்தில், உடலின் பலவகையான பிரச்சனைகளை வீட்டில் இருந்தே சரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

1. தலைவலி குணமாக: Headache

கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குணப்படும்.

வெற்றிலையை நன்றாக இடித்து சாறு பிழிந்து கொள்ளவும். இந்த சாறில் கிராம்பை நன்றாக அரைத்து கொண்டு, நெற்றியின் இரண்டு பொட்டு பகுதியில் நன்றாக தேய்த்து வந்தால் தலை வலி குணமாகும்.

2. வாய் புண் குணமாக:Mouth sore

மோரில் உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை வாயில் வைத்திருந்து, பின்பு வாய் கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை ஒரு வாரம் வரை தொடர்ந்து செய்து வர வாய் புண் குணமாகும்.

நன்கு பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

3. பல் வலி குணமாக:Toothache

பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.

4. வறட்டு இருமல் குணமாக:dry cough

கிராம்பை இடித்து பொடி செய்து கொள்ளவும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

வேலிப்பருத்திச் சாறு, துளசிச் சாறு, பசு வெண்ணெய், கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் காய்ச்சி வடித்து, காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

5. விக்கல் குணமாக:Hiccups

விக்கல் வரும்போது 1 கிண்ணம் அளவு தயிரை எடுத்து 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து மெதுவாக குடித்து வர விக்கல் குணமாகும்.

விடாமல் விக்கல் எடுத்தால் துளசி இலைகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால் விக்கல் குறையும்.

6. ஓயாத சளி குணமாக:Cold

வெற்றிலை சாறை கொதிக்க வைத்து அந்த சாறை நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாத சளி குணமாகும்.

தூதுவளைச் சாறு, துளசி இலைச் சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் ஓயாத சளிக் குறையும்.

7. கழுத்துச் சுளுக்கு குணமாக:Neck sprain

ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணிநேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும்.

சம அளவு எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் எடுத்து நன்றாக கலந்து சுளுக்கு இருக்கும் இடத்தில் சிறிது விட்டு நன்கு தடவி விட்டு வந்தால் சுளுக்கு குறையும்.

8. தூக்கமின்மை குணமாக:Insomnia

வெங்காயத்தை தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.

நல்லெண்ணெயில் பாகற்காய் சாறு கலந்து படுக்கும் முன் இந்த எண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி நன்றாக தேய்த்து விட்டு படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.

9. மூலம் குணமாக:

கண்டங்கத்திரிப் பூ, நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி மூலத்தில் தடவி வந்தால் மூலநோய் குறையும்.

திப்பிலி, சுக்கு, எள் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து பொடி செய்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.

10. நினைவாற்றல்:

பத்து பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.

வல்லாரை கீரையை தினமும் துவையல் செய்து சாப்பிட நினைவாற்றல் பெறுகும்.

11. ஒற்றை தலைவலி குணமாக:

ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிகாய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.

முட்டைகோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக் கொண்டு தலையின் மீது ஒத்தடம் கொடுத்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.

12. கால் ஆணி குணமாக:

அத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும். கால் மிருதுவாகும்.

மல்லிகை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து கால் ஆணி மீது பூசி வந்தால் கால் ஆணி குறையும்.

Tamil health tips -வீட்டு வைத்தியம்

காஷ்மீர் குங்குமப்பூ - Kashmir saffron - Tamil Health Tips

 காஷ்மீர் குங்குமப்பூ 🍂🍂🍂 *Organic Kashmir Saffron *

🍂குங்குமப்பூ 90 க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடியது.

🍂இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக நன்மைகளை தரக்கூடியது.

🍂இதில் வைட்டமின் சி மற்றும் மங்கனீசு எலும்புகளை பலப்படுத்தவும், திசுக்களை சரிசெய்யவும், செக்ஸ் ஹார்மோன்களை தூண்டவும் பயன்படுகிறது.

🍂இதை தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் சருமம் பொலிவுபெறும் உடல் வலுப்பெறும்.

🍂கர்ப்பிணி பெண்களுக்கும் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் மிகவும் நல்லது.

🍂குங்குமப்பூவை, வெதுவெதுப்பான பாலில் போட்டு, 20 நிமிடம் ஊறவைத்து, பின் அதில் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட் டால், சருமமானது வெள்ளையாகும்.

🍂குங்குமப்பூவை எலுமிச்சை சாற்றில் கலந்து மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள அதிகப் படியான எண்ணெய் நீக்கப்பட்டு, சருமத்தின் நிறம் அதிகரித்து காணப்படும்...!!!

இயற்கையாக உடல் சூடு குறைய கோடை பானங்கள் - summer drinks - Decrease body heat naturally

 

அடுத்து நாம் எதிர்கொள்ள இருக்கும் வெயில் காலம்
சில இயற்கை வைத்திய டிப்ஸ்....Decrease body heat naturally

✍  இயற்கையாக உடல் சூடு குறைய

வெண்ணெய் மற்றும் பால்

ஒரு டம்ளர் பாலில் 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும், உடல் வெப்பத்தைக் குறைக்கலாம். ஆனால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பின், இம்முறையைத் தவிர்க்கவும்.
வைட்டமின் சி  நிறைந்த உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை கோடையில் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும். எனவே இப்பழங்களைக் கொண்டு ஜூஸ் போட்டு பருகுவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்

மோர்

கோடையில் மோர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மோரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் புரோபயாடிக்குகள் போன்றவை அதிகம் உள்ளதால், இது கோடையில் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

புதினா டீ

புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வர, அதில் உள்ள குளிர்ச்சித்தன்மையினால் உடல் சூடு தணியும்.

சோம்பு நீர்

ஒரு கையளவு சோம்பை எடுத்து நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரை வடிகட்டி, தினமும் காலையில் குடித்து வர, உடல் வெப்பம் குறையும்.

கற்றாழை ஜூஸ்

கற்றாழையின் ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால், அது உடலைக் குளுமைப்படுத்துவதை நன்கு உணர முடியும். மேலும் கற்றாழையின் ஜெல்லை 2 ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் சிறிது தேன் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து குடித்து வர, கோடையில் பிடித்த உடல் சூடு குறையும்.

கரும்பு ஜூஸ்

கோடையில் தெருவின் மூலைமுடுக்குகளில் கரும்பு ஜூஸ் விற்பதைக் காண்பீர்கள். இந்த கரும்பு ஜூஸை குடிப்பதால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து நல்ல விடுதலைக் கிடைக்கும்.

முள்ளங்கி

பலருக்கும் முள்ளங்கி பிடிக்காது. இதற்கு அதன் சுவையே காரணம். ஆனால் இந்த காய்கறியை கோடைக்காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் முள்ளங்கியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. கோடையில் வெப்ப பக்கவாதம் வருவது பொதுவானது. இதற்கு காரணம் அதிகப்படியான உடல் சூடு மற்றும் உடல் வறட்சி தான். இதைத் தவிர்க்க வேண்டுமானால், அடிக்கடி முள்ளங்கியை கோடைக்காலத்தில் சாப்பிடுங்கள்.

வெள்ளரிக்காய்

கோடையில் அதிகம் விற்கப்படும் ஓர் காய்கறி தான் வெள்ளரிக்காய். இது மிகவும் சுவையாகவும், நீர்ச்சத்து நிறைந்ததாகவும் இருப்பதோடு, கோடையில் இதை சாப்பிட்டால், உடல் வறட்சி தடு, உடல் சூடு பிடிப்பது தடுக்கப்படும். எனவே இந்த வெள்ளரிக்காயை சாலட் போன்று செய்து, அடிக்கடி சாப்பிடுங்கள்.

முலாம் பழம்

கோடையில் விற்கப்படும் மற்றொரு சுவையான பழம் தான் முலாம் பழம். இந்த பழத்திலும் நீர்ச்சத்து மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த முலாம் பழத்தை ஜூஸ் தயாரித்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், கோடைக்காலத்தில் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இளநீர்

நம் அனைவருக்குமே உடல் சூடு என்றதும் குடிக்கத் தோன்றும் ஓர் பானம் இளநீர். இந்த இளநீர் ஒருவரது உடல் சூட்டைத் தணிப்பதோடு, உடலை வறட்சி அடையாமலும் தடுக்கும். மேலும் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலின் ஆற்றலை மேம்படுத்தும். எனவே கோடையில் தவறாமல் ஒரு இளநீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
   

தர்பூசணி

உடல் சூட்டைக் குறைக்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிகளவிலான நீர்ச்சத்து தான் காரணம். மேலும் தர்பூசணியை ஒருவர் தொடர்ச்சியாக கோடையில் சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சியைத் தடுத்து, உடலை போதிய நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளும். அதற்கு தர்பூசணியை சிறு துண்டுகளாக்கி, அத்துடக் சிறிது நாட்டுசர்க்கரை மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து அரைத்துக் குடியுங்கள். இல்லாவிட்டால், அதை சாலட் போன்று செய்தும் சாப்பிடலாம்.

மாதுளை ஜூஸ்

கோடைக்காலத்தில் தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸில் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து குடித்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைவதைக் காணலாம்.

தண்ணீர்

உடல் வெப்பத்தைக் குறைப்பதற்கான வழி என்னவன்று கேட்டால், முதலில் பலருக்கும் தண்ணீர் தான் நினைவில் வரும். ஆகவே ஒரு அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் கால்களை ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வர, உடலில் உள்ள அதிகமான வெப்பம் வெளியேறும். மேலும் குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.

எள்

உடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க தினமும் இரவில் படுக்கும் முன், 1 டேபிள் ஸ்பூன் எள்ளை சாப்பிட வேண்டும். குறிப்பாக எள்ளில் ஓபியேட்ஸ் உள்ளது மற்றும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்...!!!

summer drinks  - Decrease body heat naturally
💐💐

Vaccine - தடுப்பூசி -Tamil

தடுப்பூசி போட்டு தான் புற்றுநோய் வந்தது என்று கூறி பல அமெரிக்கர்கள் அரசாங்கத்தை எதிர்த்து நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்தனர்!!

இந்த அந்த விசாரணை பல ஆண்டுகள் நடைபெற்றது இறுதியாக 1985இல் அரசின் தவறு நிரூபிக்கப்பட்டு அரசு ஒப்புக்கொண்டது!! மன்னிப்பு கோரியது!!

பலரின் உயிர்காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ஏற்பட்ட சிறு பிழையாம்!!

 தாமதமாக ஒப்புக்கொண்ட நோக்கம் வழக்கு தொடர்ந்தவர்கள் யவரும் உயிருடன் இல்லை! எல்லாம் கொடிய நஞ்சான அலோபதி புற்றுநோய் சிகிச்சைக்கு பலியாகினர்!!

ஆரம்பத்தில் மறுத்த அமெரிக்க அரசு இறுதியாக ஆயிரத்து 1985 அரசின் தவறை ஒப்புக் கொண்டது!!!



இவர்களின் நஞ்சு கெமிக்கல்களால் இவர்கள் உருவாக்கிய செயற்கை பிரச்சினைக்கு ஏற்பட்ட வைரஸ் காய்ச்சலுக்கு இவர்களே கொண்டுவந்த செயற்க்கை ஊரடங்கு முகமூடி நஞ்சு கெமிக்கல் கிருமிநாசினி போன்ற காய்ச்சல் நோயை அதிகரிக்கும் செயல்பாடுகளுக்கு இவர்களே தீர்வு என்று தடுப்பு ஊசியை கொண்டு வந்து அதன் மூலம் பலரை புற்றுநோயால் சாகடித்து விட்டு பழியை தூக்கி பல மக்களை காக்க எடுத்த அவர்களின் பொன்னான தீர்வுக்கு சிலர் பலிஆகியது வருத்தம் அளிப்பதாக கூறி பழியை மக்கள் நலன் மீது போடுகின்றனர்!!!
 அப்பாவித்தனமாக காட்டிக் கொள்கின்றனர் இந்த நயவஞ்சக நரி தந்திர கொலைகாரக் பாவிகள்!!

 
1986 இல் இனி தடுப்பூசியால் மக்கள் பலியாகி நாள் நிரந்தர நோயாளியாக நாள் ஊனமாகி நாள் அதற்கு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்று ஒரு சட்டத்தை அமெரிக்க அரசு கொண்டு வந்தது இனிமேல் தடுப்பூசி மூலம் யாருக்காவது ஊனமும் மரணமோ ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு *அரசாங்கமே மக்களின் பணத்தை வைத்து தரும்* என்று ஒரு புதிய சட்டத்தை கொண்டு வந்தது இது தடுப்பூசித் உற்பத்தியாளர்களை காக்கவே கொண்டு வந்தது காரணம் அதற்கு முன்பு வரை தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி கம்பெனிக்கு எதிராகப் பல ஆயிரம் கோடிகளுக்கு நட்ட ஈடு வழக்கு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே சென்றது!!

 *அரசு என்றுமே கார்பரேட்டின் கை தானே!!* 

 இது போன்ற ஒரு முட்டாள்கள் நிறைந்த அமெரிக்க மக்கள், அரசு போன்ற ஒரு அரசை தான் தமிழ்நாட்டில் கொண்டுவர திராவிட வாரிசுகள், விஜய் கமல் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் என எல்லோரும் தமிழ்நாட்டை நஞ்சான செயற்க்கை அடிமையில் வளர்ந்த அமெரிக்கா போன்று உருவாக்க களமிறக்கப்பட்டுள்ளனர்!!

அமெரிக்கா மோகத்தை சினிமா ஊடகம் பத்திரிக்கை கல்வி மூலம் பல ஆண்டு ஆசை, எண்ண விதைப்பு செய்து வருவதன் நோக்கம் இதுவே!!

Palmyra Palm Tree - பனை மரம்

Palmyra Palm  Tree - பனை மரம் 

 "பனை"


மனிதனுக்கு இயற்கை அளித்த அற்புத வரம் பனைமரம் . இவற்றின் பயன்களும் மருத்துவ குணங்களும், எண்ணில் அடக்க முடியாது. பனை  மரத்தை பெண் தெய்வமாம் பத்திரகாளியின் அம்சமாக மக்கள் வணங்கி வருகிறார்கள்.


தமிழக அரசின் சின்னமாகவும் பனை மரம் விளங்கி வருகிறது.


பனை (Palmyra Palm), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரம்.


பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன.


பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது.


 பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

பெயரிடல்

****
பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது.
புறக் காழனவே புல்லெனப் படுமே (பாடல் 630)
அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631)
பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.

வகை

**
பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை
1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை.

பனையின் பயன்கள்

********
பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.


அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.

பனையின் மருத்துவ குணங்கள்

************
பழுத்து கனிந்தால் பனம்பழம் கிடைக்கும், பழத்தை உண்டு விட்டு போடும் கொட்டை முளைவிட்டு வளரும், கொஞ்ச நாட்கள் போனால் கொட்டைக்குள் உருவாகும் சீப்பை கிடைக்கும், இந்த சீப்பை குழந்தைகள் உண்பதற்கு சுவையாகவும், சத்தானதாகவும் இருக்கும்.
அதை இன்னும் கொஞ்சநாள் விட்டால் பனங்கிழங்கு கிடைக்கும் சத்து மிகுதியான இந்த கிழங்கு மனிதனின் வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.


நுங்கில் அதிகஅளவு வைட்டமின் பி, சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகமாக இருக்கிறது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.
நுங்கில் உள்ள நீர் சத்தானது, வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டுவதோடு மலச்சிக்கல், வயிற்றுபோக்கு இவ்விரண்டிற்கும் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.


 பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும். உடல் பலமும் அதிகரிக்கும்.
தொடர்ந்து பதனீரை 40 நாட்கள் குடித்து வந்தால் மேக நோய் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துபோகும். உடல் வீக்கம், வயிற்றுக்கோளாறு, வெள்ளைப்படு, வெட்டை நோய்களை குணமாக்கவும், சிறுநீர் வெளியேற்றவும் பதனீர் நமக்கு உதவுகிறது.


பன கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டியும் சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும்.
நுங்குக்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் கொண்டது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நுங்கு சாப்பிட்டால் நல்ல பயன்பெற முடியும்.


பனங்கிழங்குடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும். பனம் பழத்தின் சாறு தோல் நோய்களுக்கு மிகவும் சிறந்தது.
பனம் பூவை நெருப்பில் சுட்டு சாம்பலாக்கி மருந்தாக பயன்படுத்தலாம். இதன்மூலம் சிறுநீர் பெருக்கு, வாய்வு நோய்கள், பல் வலி, நாள்பட்ட காய்ச்சலுக்கும் மருந்தாகி உதவுகிறது.


உடல் வீக்கம், நெஞ்சு எரிச்சலும், பித்தக்கோளாறுகளுக்கும் கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் வீக்கத்தையும் குணப்படுத்தவும் பனை பூந்தண்டு சாம்பலை மருந்தாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.


பனைமரம் பாலை விட்டு காய்க்க தொடங்கினால், அந்த பாலையிளிருந்து பதநீர் கிடைக்கும், அதே பதநீரில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால், கொஞ்சம் போதை தரும், இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும்.


பனைத்தொழில்

******
விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும்.


உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்தல், சந்தையிடல் ஆகியவற்றிலும் கூடச் சிக்கல்கள் உள்ளன. போதிய முதலீடின்மை, தொழிலாளர் எண்ணிக்கைக் குறைவு ஆகியன பெரும் சிக்கல்கள் எனக் கூறப்படுகின்றன. மிகக் குறைந்த வருமானத்தையே நல்கும்நிலையில் பனைத்தொழில் இருப்பதால் தொழிலாளர்களை பெருமளவில் ஈர்க்க முடியாமல் இத்தொழில் மெல்ல மெல்ல நலிந்து கொண்டிருக்கிறது.
எவ்வாறாயினும் பனைத்தொழில் பெருமளவு வேலைவாய்ப்பும்; உணவு மற்றும் உணவிலிப் பனைப் பொருள்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேவை அதிகம்.


பதநீரைக் கொண்டு வெல்லம் காய்ச்சுவதைக் காட்டிலும் பனங்கற்கண்டு தயாரித்தல் இலாபமுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வுற்பத்தியால் பனைத்தொழிலாளர் வாழ்வும் தொழிற்றுறையின் வளர்ச்சியும் மேம்படுவது ஐயத்திற்கு இடமின்றி நிரூபனமானது.


உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்யும் அலகுகளை தோற்றுவிக்கும் பணியில் கூட்டுறவுத்துறையும் தன்னார்வத் தொண்டகங்களும் தனியார்களும் ஈடுபட்டுள்ளனர். வடிவமைத்தல் பயிற்சி, உற்பத்திப் பொருள்களை பரவலாக்கல், சரியான முதலீடு, சந்தையிடல் வசதிகள் ஆகியன உணவிலிப் பொருள்களின் உற்பத்தியையும் சந்தையிடலையும் அதிகப்படுத்தியுள்ளன.


தமிழகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களுக்கு பனைத் தொழில் கொண்டுள்ள வளவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு தந்து அவர்கள் வாழ்க்கையை சீர்படுத்துவதில் பொது மக்கள் நமக்கும் பொறுப்பு உள்ளது.


🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴



****

மௌனம் - Silence

 மௌனம்

மௌனம் பாதுகாப்பானது
என்று நினைத்து கொண்டு
பலரும் தங்களை தாங்களே
சிறை வைத்து கொள்கிறார்கள்

பேசும் சக்தியையும்
பேசும் மொழியையும்
இறைவன் தந்தது
மௌனமாய் இருப்பதற்கா

மௌனமாய் பக்தியையோ பாசத்தையோ
காட்ட முடியாது

அன்பு வெறுப்பது
மௌனத்தை மட்டும் தான்

ஒரு குழ்ந்தையை மௌனமாக
எப்படி கொஞ்சுவது

மௌனத்தால்
நீதியை எப்படி
நிலை நாட்டுவது

மௌனம் தனிமைக்கு உகந்தது

அந்த ஊமை நிலையை
உறவாடும் இடத்தில்
உட்கார வைக்காதீர்கள்

பாலைவனத்தில் தான்
மௌனம் பாய்விரித்து படுத்திருக்கும்

அழகிருக்கும் இடங்களில் எல்லாம்
ஓசை ஆலோலம் பாடி இருக்கும்

பேசுவதினால்
பிரச்சினைகள்
பெரிதாவதாக பிதற்றாதீர்கள்
அது பேசத் தெரியாமல்
பேசவதினால் ஏற்படும் பின்னடைவு

பேசா விட்டால்
பிரச்சினைகள்
புரையோடும் நிறைவேறாது

இதழ்களை பூட்டி வைத்து
இதயத்தை இருட்டாக்காதீர்

மௌனம் மனதில் எடை ஏறச் செய்யும்
பேச்சொன்றே சகலத்திற்கும்
விடைகானச் செய்யும்

உதடுகளை உடைத்து
உள்ளத்தில் இருப்பதை கொட்டுங்கள்
கொண்ட வேண்டிய இடத்தில்
உள்ளம் பஞ்சாகும்
இல்லை நஞ்சாகும்🎈🧸🎈


 

மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body

மனித உடலில் உள்ள முக்கியமான உறுப்புகள் - Important organs in the human body



மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்ச்சக்தி ஓட்டத்தின் உச்ச கட்ட இயக்கத்தில் இருக்கும். இது இயற்கை.

ஒருவர் இயற்கையின் விதிகளை மீறும் போது இயற்கை அவருக்கு அளிக்கும் தண்டனையே நோய்.

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டு மென்றால் அவனுடைய உடல் மொழியைக் கேட்கக் கற்றுக் கொள்ளவேண்டும்.



 கீழ்க்கண்ட வழிகளை உடல் உறுப்புகள் உங்களைப் பின்பற்றக் கூறுகின்றன.

நமது உடல், உள் உறுப்பு ஒவ்வொன்றும் ஓய்வில்லாமல் நாள் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் தினசரி ஒவ்வொரு உறுப்பும் இரண்டு மணி நேரம் மிகவும் சக்தியுடன் இயங்குகிறது.

 Lungs – நுரையீரல் :


 சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் அதிக சக்தி நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள்அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும்.

தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

 Large Intestine பெருங்குடல் :  


சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் விடியற்காலை 5.00 - 7.00 மணிவரை பெருங்குடலின் அதிக சக்தி நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்.

 மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.

 உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே. குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அதனால் நரம்புத் தளர்ச்சி ஏற்படாது.

 Stomach இரைப்பை :

 சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் காலை 7.00 - 9.00 மணிவரை வயிற்றின் அதிக சக்தி நேரம். இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும்.

 காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகும்.

 Spleen மண்ணீரல் :

 சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம்  காலை 9.00 - 11.00 மணி வரை. காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும், இரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும்.

அப்படி எதுவும் சாப்பிட்டால் மண்ணீரல் பாதிப்பு ஏற்படும் உடலில் வெப்பம் அதிகரிக்கும். சாப்பிட்டதும் ஏற்பட வேண்டிய சுறுசுறுப் பிற்கும், புத்துணர்ச்சிக்கும் பதிலாக அசதியும், தூக்கமும் வரும்.

 நாளடைவில் பசி குறையும். (நீரிழிவு நோயளிகளுக்கு படபடப்பு, மயக்கம், தூக்கக் கலக்கம் ஏற்படும்.) நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

 Heart இருதயம் :


 முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் அதிக சக்தி நேரம்.

இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல்கூடாது. கடினமான வேலை ஏதும் செய்யாமல் தண்ணீர் மட்டும் குடிக்கலாம், மருத்துவ மனைகள் எல்லாம் விழிப்புடன் இருக்கும் நேரமிது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.

 காரணம் இந்த நேரத்திற்தான் இருதய நோயாளிகளுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க இவர்கள் இந்த நேரத்தில் தூங்காமல் இருக்க வேண்டும்.

 தூங்கினால் அபான வாயு பிராண வாயுவுடன் கலந்து மாரடைப்பு, முகவாதம், பக்கவாதம் அல்லது மூட்டுவாதம் மற்றும் உடல் வலிகளை நிச்சயம் ஏற்படுத்தும்.

 Small Intestine சிறுகுடல் :

சக்தி ஓட்டம் அதிகம் உள்ள நேரம் பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் அதிக சக்தி நேரம் இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு மதிய உணவை முடித்து 3 – 5நிமிடங்கள் கண்களை மூடி ஓய்வு எடுக்கலாம். படுத்து உறங்குவதை இந்த நேரத்தில் தவிர்க்க வேண்டும்.

 Urinary Bladder சிறுநீர்ப்பை :

பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் அதிக சக்தி நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

பானங்களோ, தண்ணீரோ குடிக்க உகந்த நேரம். முதுகு, இடுப்பு வலிகள் வரும் நேரம்.

 Kidney சிறுநீரகம் :

மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் அதிக சக்தி நேரம். வழக்கமான வேலையில் இருந்து விடு பட்டு இரவுக்கு முன்பாகவே வீடு வந்து சேரவேண்டும். ரீனல்பெயிலியர் முதல் நீர்க்கடுப்பு வரை ஏற்படும்.

பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம் செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

 Pericardium இருதயஉறை :

இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் அதிக சக்தி நேரம்.

 பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும். ஒரு ஜவ்வு. இதயத்தின் Shock absorber. இரவுஉணவுக்கு உகந்த நேரம்.மார்பு வலி, பாரம், படபடப்புத் தோன்றும்.

Riple Warmer மூவெப்பமண்டலம் :


 இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை அதிக சக்தி நேரம்.

டிரிப்பிள் கீட்டர் ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.இந்த நேரத்திற்குப் பின்பு கண் விழித்திருப்பதோ படிப்பதோ கூடாது.

 Gall Bladder பித்தப்பை :

இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் அதிக சக்தி நேரம்.

 இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும், அடுத்த நாள் உங்கள் முழு சக்தியையும் இழக்க நேரிடும்.

 Liver கல்லீரல் :


இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் அதிக சக்தி நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.

கட்டாயம் படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.

இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள், கண்டிப்பாக கண்ணின் பார்வை சக்தி குறையும். உறக்கம் பாதிக்கும். உடலில் அரிப்பு, நமைச்சல் அதிகரிக்கும்.



🌷🌷

Tamil Health Tips 

சனி, 20 நவம்பர், 2021

Atlantis Exchange - Biggest Airdrop - New login offer

 

Biggest Airdrop. 


20000AC Coin worth $2000USD


Exchange link - https://atlantiscex.com/r/A0031294730

Refer Code - A0031294730

Atlantis Exchange is a blockchain-based, high-tech and high-speed platform that allows global users to easily buy, sell, store, and earn cryptocurrencies such as BTC, ETH, DOGE, USDT, USDC, BNB, TRX, and AC, etc., in addition to fiat money such as US dollars, based on its secured website and smartphone APPs,


As a US-based cryptocurrency exchange registered with the State Government and the U.S. Department of the Treasury, Atlantis Exchange supports both crypto-crypto trading and crypto-USD trading. It accepts fiat currencies via wire transfers, credit card payments, and other forms of payment in exchange for cryptocurrencies. In addition to US dollars, other fiat money services will be provided later.

Atlantis Exchange provides global users with an easy to use, fast, low-cost, reliable, and secure environment for digital asset trading based on the latest MIT's blockchain technology:

1) As a market matching platform, it charges VERY COMPETITIVELY LOW transaction fees to benefit its users.

2) Meanwhile, it offers BIG rewards, bonuses, and discounts to its users who have referred others to use Atlantis Exchange from time to time.


Exchange link - https://atlantiscex.com/r/A0031294730


#Airdrop #NewExchange

சனி, 6 நவம்பர், 2021

Cryptocurrency-யை பாதுகாப்பது எப்படி?

உங்கள் Cryptocurrency-யை பாதுகாப்பாக வைப்பது எப்படி? 

உங்கள் Cryptocurrency-யை பாதுகாப்பாக வைத்திருக்க 6 சிறந்த வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கிரிப்டோகரன்சிகள் சந்தையில் தோன்றியதிலிருந்து, அவை பல தொழில்களை சீர்குலைத்துள்ளன. இருப்பினும் Bitcoin, Ethereum மற்றும் பிற பிரபலமான நாணயங்களில் மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

பணம் இருக்கும் இடத்தில் எப்போது வேண்டுமானாலும் திருட்டு நடக்கலாம். அதற்கு கிரிப்டோகரன்சி மட்டும் விதிவிலக்கு அல்ல. பணத்தை கையிலும் பையிலும் வைத்திருக்கும்போது மட்டுமல்ல, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு ஏற்ப இணையத்திலும் இப்போது ஹாக்கிங் என்ற பெயரில் திருட்டு நடக்கிறது. யார் எடுத்தார் என்பது கூட தெரியாமல் நம் பணம் காணாமல் போய்விடும்.



இப்போது திருடர்கள் கிரிப்டோ நாணயங்களையும், அது தொடர்பான தளங்களில் வைத்திருக்கும் பணத்தையும் திருட ஆரம்பித்துவிட்டனர்.

கிரிப்டோகரன்சிகள் பல வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த நிதி சொத்து. ஆனால் அவை மிகவும் பயனுள்ளதாக இருந்தபோதிலும், அவை அபாயங்கள் இல்லாமல் இல்லை - உங்கள் private Keys இழப்பு, கணினி செயலிழப்பு மற்றும் திருட்டு ஆகியவை உங்கள் நாணயங்களை நிரந்தரமாக வெற்றிடமாக மாற்றிவிடும்.

உங்கள் Private Keys என்பது உங்கள் கிரிப்டோகரன்சி வாலட்டுக்கான அணுகலை வழங்கும் முக்கியமான தகவலாகும். தொலைந்து போகாமல் அல்லது திருடப்படாமல் பாதுகாக்க, அவற்றை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பது அவசியம்.


உங்கள் கிரிப்டோகரன்சியை எவ்வாறு பாதுகாப்பது?

 கிரிப்டோகரன்சிகள் வேகத்தை அதிகரித்து வருகின்றன, ஆனால் அவை அபாயங்களுடன் வருகின்றன. Bitcoin, Etherium, Litecoin போன்றவற்றின் மதிப்பு தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருக்கும். கிரிப்டோகரன்சியை வர்த்தகம் செய்யும் போது உங்கள் ஆன்லைன் வாலட்டை பாதுகாக்க பல வழிகள் உள்ளன. உங்கள் வாலட்டை பாதுகாக்க உதவும் சில குறிப்புகள் இங்கே உள்ளன.

1-வலுவான கடவுச்சொல் (Password) மூலம் உங்கள் கிரிப்டோகரன்சி வாலட்டைப் பாதுகாக்கவும்:

பல சேவைகளில், குறிப்பாக கிரிப்டோகரன்சி சேவைகளில் ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்த வேண்டாம். பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்வது முக்கியம். இரண்டு காரணி அங்கீகாரத்தை (two-factor authentication) செயல்படுத்துவதை உறுதிசெய்து, சேவை மீறப்பட்டால் உங்கள் கடவுச்சொற்களை தவறாமல் மாற்றவும். password manager-ஐ பயன்படுத்துவது இந்த செயல்முறையைத் தானியங்குபடுத்துவதற்கும் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் உதவும்.

2- ஆன்லைன் வாலட்களில் அதிக கிரிப்டோவை வைக்க வேண்டாம்:

கிரிப்டோகரன்சியை ஆஃப்லைனில் வைத்திருப்பதே அதைச் சேமிப்பதற்கான சிறந்த வழியாகும். ஹேக்கர்கள் சமீபகாலமாக ஓன்லைன் வாலட்களை குறிவைத்து வருகின்றனர், எனவே நுகர்வோர் தாங்கள் எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஆஃப்லைன் சேமிப்பகம் சிறந்த வழி, அதைச் செய்வதற்கு hardware wallet ஒரு சிறந்த கருவியாகும். ஒரு பாதுகாப்பானது, மேலும் அதை பயன்படுத்த எளிதானது - USB வழியாக அதை கணினி அல்லது தொலைபேசியில் செருகவும், பிறகு உங்கள் நாணயத்தை மாற்றவும்.



3- எந்த நம்பகத்தன்மையற்ற கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை (cryptocurrency exchange) நம்புவதைத் தவிர்க்கவும்:

நீங்கள் கிரிப்டோகரன்சி சந்தையில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால், யாரை நம்புவது மற்றும் யாரிடமிருந்து ஓடுவது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் Ethereum அல்லது வேறு ஏதேனும் கிரிப்டோ நாணயத்தை வாங்குவதற்கு முன் Trustpilot இல் மதிப்புரைகளைச் சரிபார்ப்பது ஒரு நல்ல தொடக்கத் தளமாகும்.

4- உங்கள் mobile traffic-ல் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்:

கிரிப்டோகரன்சி விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால், Phishing campaigns மோசமாகிவிடும். ஃபிஷிங்கைத் தவிர, தீங்கிழைக்கும் பயன்பாடுகள் உங்கள் மொபைல் சாதனத்திற்கான அணுகலைப் பெறலாம் மற்றும் உங்கள் உள்நுழைவுச் சான்றுகளைத் திருடலாம். நம்புவதற்கு சற்று கடினமாக இருக்கலாம், ஆனால் இந்த தீங்கிழைக்கும் மொபைல் பயன்பாடுகள் நீங்கள் என்ன தட்டச்சு செய்கிறீர்கள் அல்லது உங்கள் திரையில் படங்களை எடுக்கலாம். உங்கள் மொபைல் சாதனத்திலும் வைரஸ் தடுப்பு மென்பொருளை (antivirus software) வாங்குவது நல்லது.



5- உங்கள் private key-ஐ பகிர்வதைத் தவிர்க்கவும்:

Private key என்பது ஒரு பயனரின் டிஜிட்டல் நாணயத்திற்கான அணுகல் குறியீடாகும். உங்கள் தனிப்பட்ட விசையை உங்கள் பயனர் பெயராகவும், உங்கள் பொது முகவரியை உங்கள் மின்னஞ்சல் முகவரியாகவும் கருதுங்கள். உங்கள் private keyயை வேறு யாரேனும் அணுகினால், அவர்கள் உங்களின் அனைத்து கிரிப்டோகரன்ஸிகளையும் திருடலாம். அதனால்தான் இந்தத் தகவலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம், அதை யாருடனும் பகிர வேண்டாம். தகவல் கசிவு அல்லது ஹேக் தாக்குதல்களைத் தவிர்க்க ஒரு துண்டு காகிதத்தில் அதனை குறித்து கொள்வது சிறந்தது.



6- வழங்குநர்கள் வழங்கும் வாலட்களில் இருந்து ஓடிவிடுங்கள்:

மூன்றாம் தரப்பினரால் கட்டுப்படுத்தப்படும் சேவையகங்களில் தனிப்பட்ட விசைகளை ("வாலட்") சேமிக்கும் முறை ஒரு பெரிய பாதுகாப்பு அபாயமாகும். உங்கள் நாணயங்களின் தலைவிதி வேறொருவரின் கைகளில் உள்ளது என்று அர்த்தம். யாரேனும் தங்கள் சேவையகங்களில் ஒன்றை அணுகினால், அவர்கள் அவற்றை தொலைதூரத்தில் காலி செய்யலாம். யாராவது உள்ளே நுழைந்தால், அவர்கள் எல்லாவற்றையும் திருடலாம். மற்றும் அதை திரும்ப பெற வழி இல்லை.

Cryptocurrency மிகவும் பிரபலமான நிலையில், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் கெட்ட எண்ணம் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடுமையான பாதுகாப்பு நெறிமுறையைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் கிரிப்டோகரன்சி சொத்துக்களைப் பாதுகாக்கவும், மோசடி செய்பவர்களிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கவும் மற்றும் சாத்தியமான இழப்புகளிலிருந்து பாதுகாப்பாகவும் இருக்க முடியும். 

சனி, 3 ஏப்ரல், 2021

தா.பாண்|டியன் - கம்யூனிஸ்ட் கட்சி - D.Pandiyan life History - Communist party


உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் தாவீது (டேவிட்) - நவமணி தம்பதிக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர் தா.பாண்|டியன் (18.5.1932). அந்தக் காலத்தில் கல்விச் சேவை செய்வதற்காக கிறிஸ்தவ மிஷனரி தொடங்கிய பள்ளியில் ஆசிரியர்களாக இருந்தனர் பாண்டியனின் பெற்றோர். காமக்காபட்டி கள்ளர் சீரமைப்புத் துறைப் பள்ளியில் ஆரம்பக்கல்வி. பின்னர், உசிலம்பட்டி போர்டு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் பாண்டியன்.

மேடையில் கன்னிப்பேச்சு சிறந்த பேச்சாளர். உசிலம்பட்டியில் 8-ம் வகுப்பு படித்தபோது அவரைக் கேட்காமலேயே பேச்சுப் போட்டியில் சேர்த்துவிட்ட ஆசிரியர், “உன் அப்பா வாத்தியார்தானே, அவரை எழுதித் தரச் சொல்லிப் பேசு” என்று சொல்லிவிட்டார். தந்தையோ, “படிக்கிற வயசுல மேடையேறுன யாரும் உருப்பட்டதில்லை” என்று சொல்லிவிட்டார். உரை எழுதிக் கொடுத்து பயிற்சியும் தந்தவர் அண்ணன் தா.செல்லப்பா. பிற்காலத்தில் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் இவர். ஒருகட்டத்தில் “நீயே போட்டிக்குத் தயாராகு” என்று அண்ணன் தந்த ஊக்கத்தில் சிறந்த பேச்சாளராக உருவானார் பாண்டியன். காரைக்குடி கம்பன் கழகத்துக்கும் இதில் பெரும் பங்குண்டு.
துடிப்பான மாணவர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இன்டர்மீடியட் சேர்ந்தபோதே (1953) கட்சியிலும் சேர்ந்துவிட்டார். மாணவர் பேரவைத் தேர்தலிலும் வெற்றி. பின்னர், அதே கல்லூரியில் ஆங்கில ஆசிரியரான பிறகு, கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டினார். 1957 தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் புனைப்பெயரில் அவர் பேச, ஒரு பத்திரிகையில் உண்மையான பெயர் வந்துவிட்டது. வேலையை ராஜினாமா செய்யச் சொன்னார் கல்லூரி முதல்வர்.

அந்நேரம் பார்த்து பாண்டியனை அழைத்த அழகப்பா கல்லூரி நிறுவனரான அழகப்பச் செட்டியார், “தலைமறைவாக இருந்துகொண்டே போலீஸிடம் சிக்காமல் அரசியல் நடத்துகிற சாமர்த்தியசாலிகள் அல்லவா கம்யூனிஸ்ட்டுகள்... நீ இப்படி மாட்டிக்கொண்டாயே?” என்றார். கூடவே, லண்டனில் தான் சட்டம் படித்த போது வாங்கிய மார்க்ஸ் எழுதிய புத்தகங்களை தா.பா.விடம் கொடுத்தார் செட்டியார். “நம் கல்லூரியில் மாணவர் பேரவைத் தலைவராக வென்ற எந்த மாணவனும், ‘அரியர்’ வைக்காமல் தேர்ச்சி பெற்றதில்லை. நீ இரண்டிலும் வென்றாயல்லவா... அதற்குத்தான் இந்தப் பரிசு!” என்று ஆச்சரியப்பட வைத்தார்.

தாமதமாக உணர்ந்த பேரன்பு! தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக, இரண்டு வயதில் தந்தையை இழந்த ஜாய்சி என்ற பெண்ணை தா.பா.வுக்குத் திருமணம் செய்துவைத்தார் அப்பா தாவீது. பாண்டியனுக்கு டேவிட் ஜவஹர் என்ற மகனும், அருணா, பிரேமா ஆகிய மகள்களும் உள்ளனர். வெகுசீக்கிரமே, கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளரானதால் வேலையை விட்டுவிட்டு சென்னைக்குப் போய்விட்டார் தா.பா. அரசியலுக்காக சென்னையில் சட்டம் படித்தவர், நீதிமன்றத்துக்குச் செல்லாமல் ‘ஜனசக்தி’யில் கட்டுரை எழுதுவது, பொதுக்கூட்டம் என்று இயங்கிவந்தார். காரைக்குடியில் பள்ளி ஆசிரியையாக இருந்த தனது மனைவி அனுப்பிவைத்த சம்பளத்திலேயே இவரது ஜீவனம் நடந்தது. “திருமணமான புதிதில் அவளது சின்ன எதிர்பார்ப்பான பூவைக் கூட நான் வாங்கிக் கொடுத்ததில்லை. பட்டது போதும் என்று 2012-ல் மறைந்துவிட்டாள். இப்போது அவளது படத்துக்குப் பூச்சூடி கடனைத் தீர்க்கிறேன்” என்கிறார் பாண்டியன்.

தலைசிறந்த ஜனநாயகவாதி! இந்த உலகத்தை மீட்க ஒரே ஒரு கட்சியால்தான் முடியும் என்றெல்லாம் கருத மாட்டார். மாற்றுக் கட்சிகள், தலைவர்களின் கொள்கைகளையும் மதிப்பவர். ஆரம்பகால கம்யூனிஸ்ட் கட்சியினர், திகவை ‘திராவிடர் கலகம்’ என்று இழிவுபடுத்தி வந்த காலத்திலேயே பெரியாரைப் புகழ்ந்துபேசி கட்சியின் கண்டனத்துக்கு உள்ளானவர். எந்தக் கட்சி எங்கே பொதுக்கூட்டம் போட்டாலும் முதல் ஆளாகப்போய்விடுவார். அண்ணாவை அவரது மேடையிலேயே எதிர்த்துப் பேசியிருந்தாலும், 1967-ல் திமுக வெற்றிவிழா சென்னை கடற்கரையில் நடந்தபோது, பார்வையாளர் வரிசையில் போய் உட்கார்ந்து கவனித்தவர். இப்போதும்கூட திராவிடக் கட்சிகளின் ஆட்சியை விமர்சிக்கிறபோது, அவற்றின் சாதனைகளைச் சொல்லாமல் மறைப்பதில்லை.

கைகொடுத்த ‘கை’! கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, தோழர் டாங்கே, கல்யாணசுந்தரம் போன்றோர்களோடு சேர்ந்து ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய பாண்டியன், 1983 முதல் 2000-ம் வரையில் அதன் மாநிலச் செயலாளராக இருந்தார். சட்டமன்றத்துக்கு 6 முறை, நாடாளுமன்றத்துக்கு 3 முறை என்று மொத்தம் 9 தேர்தல்களில் போட்டியிட்ட தா.பாண்டியன் ஒருமுறைகூட தன் கட்சி சின்னத்தில் வென்றதில்லை. ஆனால், தனிக்கட்சி நடத்திவந்த காலகட்டத்தில் வடசென்னையில் கை சின்னத்தில் போட்டியிட்டு இருமுறை எம்.பி.யாகியிருக்கிறார்.

மும்முறை செயலாளர்! 2000-ல், ஐககவைக் கலைத்துவிட்டு தாய்க்கட்சியில் மீண்டும் இணைந்தார். 2005-ல், கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மும்முறை அப்பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்பட்டவர், 2015 வரையில் தொடர்ந்து 10 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்தார். இளம் வயதிலேயே கட்சியின் தேசியக்குழு உறுப்பினரான அவர், இப்போதும் அப்பொறுப்பில் தொடர்கிறார்.
செத்துப் பிழைத்தவர்! சிறந்த மொழிபெயர்ப்பாளர். 

இந்திரா காந்தி தொடங்கி ராஜீவ் காந்தி வரையில் பலரது பேச்சுக்களை மேடையில் மொழிபெயர்த்திருக்கிறார். 1991 மே 21-ல் குண்டுவெடிப்பில் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தின்போது அவருக்குப் பின்னால் இருந்த தா.பா.வும் தூக்கிவீசப்பட்டார். பத்திரிகையில் வெளியான இறந்த 19 பேர் பட்டியலில் முதலில் இவரது பெயரும் இடம்பெற்றது. போலீஸ் அதிகாரிகளும் வீட்டுக்கு போன் செய்து பாண்டியன் இறந்ததாகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், சென்னை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டு அதிசயமாக உயிர்பிழைத்தார் தா.பா. அங்கேதான் ராஜீவின் உடல் வைக்கப்பட்டிருந்தது என்பதால், அந்த மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தியின் பெயரைச் சூட்டக் காரணமாக இருந்தார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்தார். ஆனால், ஈழத்தமிழர்களின் உரிமைக்காக நெடுமாறனுடன் சேர்ந்து தொடர்ந்து குரல் கொடுத்தார்.

பிடிவாதக்காரர்! சென்னை துறைமுகத்தில் தினக்கூலித் தொழிலாளர்கள் 58 பேர் நீதிமன்றத்தை நாடி, 1992-ல் பணி நிரந்தர உத்தரவு பெற்றனர். அதை ஏற்காமல் அப்போதைய இயக்குநர் மேல்முறையீடு செய்ததால், அதைக் கண்டித்து காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருந்தார் தா.பா. அப்போது ஆளுங்கட்சியாக இருந்த, இவரது கூட்டணியில் இருந்த அதிமுகவும், காங்கிரசும் கேட்டுக்கொண்டும் தன் பிடிவாதத்தைக் கைவிடவில்லை.

 கடைசியில், வழக்கை வாபஸ் பெற்று 58 பேரையும் பணிநிரந்தரம் செய்தது துறைமுகக் கழகம். எளிமையிலும் பிடிவாதம். இப்போதும்கூட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.
எழுத்தாளர் தா.பா.! 1962-ல் ‘ஜனசக்தி’யில் எழுத ஆரம்பித்தவர், இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் ‘சவுக்கடி' என்ற புனைப்பெயரில் இவர் எழுதிய கட்டுரைகளுக்குக் கட்சி எல்லையைத் தாண்டியும் வாசகர்களுண்டு. சுய கட்சி விமர்சனத்தில் இவரை மிஞ்சிய சமகாலப் பொதுவுடமைவாதி யாருமில்லை. 16 ஆண்டு காலம் 'ஜனசக்தி' ஆசிரியராக இருந்த இவர் இதுவரையில் 13 சிறு வெளியீடுகள், 8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். அதில் ‘மேடைப்பேச்சு’, ‘பொதுவுடமையரின் வருங்காலம்’ நூல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றவை!

தனிநபர் வரலாறு! தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவருக்கு (ஜீவா) சிலை வைத்தபோது, அந்தக்கு ழுவின் தலைவராக இருந்தவர் தா.பா. “தனிநபர்களைவிட இயக்கமே பெரிது” என்று சொல்லும் கம்யூனிஸ்ட் கட்சியில், “தனிநபருக்கும் வரலாற்றில் இடமுண்டு” என்று வாதிடும் துணிச்சலுக்கு மறுபெயர்தான் தா.பா.!
D.Pandiyan life History - Communist party

Popular Posts

Facebook

Blog Archive